ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி இலக்கியத்திற்கான நோபல் பரிசை அவருக்குப் பெற்றுத் தந்தது. ஆசிய அளவில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்ற முதல் மனிதர் ரவீந்திரநாத் தாகூர்.தாகூர் வங்க மொழியில் எழுதி, அவரே ஆங்கிலத்தில் (Song Offerings) மொழிபெயர்த்த கீதாஞ்சலி எனும் கவிதை நூல் வாழ்க்கைத் தத்துவத்தை ஆன்மிக நோக்கில் விவரிக்கும் ஓர் அற்புத நூல். அன்றாட வாழ்வில் பயணிக்கும் சாதாரண மனிதனுக்கு இறைவனை அடையும் வழியைக் காட்டும் இந்தக் கவிதைகள் ஆன்மிகத்தை மட்டுமல்லாமல் நம் பிறப்பிற்கான அர்த்தத்தையும், ஒரு சிறந்த மனிதனாக நாம் எப்படி வாழவேண்டும் என்ற வழியையும் காட்டுகிறது.தாகூரின் தத்துவங்களை எளிமையாகவும் தேர்ந்த மொழிநடையிலும் சுவித்துவம் மாறாமல் தமிழில் தந்திருக்கிறார் ப.சரவணன்.
Be the first to rate this book.