சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கு முன் நிபந்தனையான சூழலியல் பாதுகாப்பு குறித்த விவாதமே வரும் காலத்தின் அரசியல் போக்கை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றப்போகிற நிலையில், சூழலியல் அரசியல் குறித்த கோட்பாட்டுப் புரிதல் அதையொற்றிய நடைமுறை அரசியலில் இன்று பெரும் வெற்றிடம் நிலவுகிறது. இயற்கைக்கும் மனித சமூகத்திற்கு இடையிலும், மனித சமூகங்களுக்கு இடையிலும் கூர்மை பெற்று வருகின்ற இப்பகைநிலை முரண்பாடுகள் குறித்து நமது இயற்கைவாதிகளும், சூழல் வாதிகளும், சமூகவியலாளர்களும், அரசியல் செயற்பாட்டளர்களும் சிக்கலை இளவாத அரசியல் நலனிற்கு பயன்படுத்துகிற போக்கும் சிக்கல்களை சதிக்கோட்பாடுகளைக் கொண்டும், துண்டு துண்டாக விளக்குகிற போக்கும் அதிகரித்து வருகின்றன. மற்றொரு முகாமோ, சமூக ஜனநாயக சீர்திருத்தல்வாத பாதையையும் சட்டவாத தீர்வுகளையும். தனிநபர் சீர்திருத்தல்வாதத்தையும் முன்வைக்கின்றன. இந்த பிற்போக்கு சக்திகள் அனைத்தும், நிலவுகிற அமைப்பிற்கு எதிரான உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தை பின்னுக்கிழுக்கின்ற வேலைகளை அரசின் வாலாக நின்று செயலாற்றுகின்றனர்.
Be the first to rate this book.