இந்த நூலின் முன்மொழிவுகளை ஆழ வாசித்த நிலையில், சுயமரியாதை இதழியல், திராவிட இயக்க இதழியல் என்னும் இருவகை இதழியல்களுக்குமிடையே காட்டி இருக்கும் தனித்துவத் தன்மைகளை உள்வாங்கியும் அவற்றை சிந்தனைத் தளத்திலும், செயல்பாட்டுத் தளத்திலும் புரிந்துகொண்டு இயங்குதலுமே நமக்கு இந்நூல் சொல்லும் வேலைத்திட்டமாகும்.
மூர்த்தி சிறிதெனிலும் கீர்த்தி பெரிதென்று ஒரு சொல்லாடல் உண்டு. அவ்வாறான கீர்த்திமிக்க இந்நூலினை படைத்தளித்த பேராசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நமது பேருவகை கலந்த நன்றிகள்.
-தோழர் கொளத்தூர் தா.செ.மணி
மணிகோ. பன்னீர்செல்வம்
சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர், பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கையின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இது இவரது பதினைந்தாவது நூல்.
Be the first to rate this book.