இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் அதிகாரத்தின் கோமாளித்தனங்களை குழந்தைகளுக்கு உணர்த்துகிற கதைகள்.
அதிகாரத்தை கேலி செய்வது, கிண்டல் செய்வது, பகடி செய்வதன் மூலம் அதிகாரம் பற்றிய பயத்தை மாற்றுகிற கதைகள், கதைகளை வாசிக்கும் குழந்தைகளிடம் எல்லா விதமான அதிகாரங்களையும் எள்ளி நகையாடும் மனநிலையை இந்த தொகுப்பில் உள்ள கதைகள் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.