இனம் காணப்பட வேண்டிய ஆளுமைகள் சிலரை, தனது நேர்காணல் மற்றும் கட்டுரை வாயிலாக இத் தொகுப்பில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சுகதேவ். வளரும் தலைமுறைக்கான செய்திகள் இவற்றில் நிறைந்திருக்கின்றன.
தென்கச்சி கோ. சுவாமிநாதன், வானியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தொழில்துறை முன்னோடி ஏ.எம்.எம். அருணாசலம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பெற்றுத் தந்த அருணா ராய், இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி, புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய், கணித நிபுணர் வசந்தா கந்தசாமி, நீதியரசி பிரபா ஸ்ரீதேவன், நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம், இசை விமர்சகர் சுப்புடு எனப் பலரும் அவரவர் துறைகளில், பின்வரும் காலம் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். அவற்றை ஒருங்கே பதிவு செய்யும் தொகுப்பு இது.
Be the first to rate this book.