சமகாலத் தமிழ்க் கவிதையில் படிமங்கள் பெருகியுள்ளன. படிமத்தின் உள்ளே நீண்டகாலம் கனன்று கொண்டிருக்கும் அனுபவத்தை உருவாக்கும் கவிதைகள் அரிது. மொழியின் அலங்காரத்திலும் கருத்திலும் சிக்கிக்கொள்ளாமல், சொற் சிக்கனத்தையும் உணர்வின் அடர்த்தியையும் ஒருங்கே தாங்கும் கவிதை உலகு நர்சிமின் "சுடர்வதும் எரிவதும் வேறு வேறானவை".
மைய உருவகம் நெருப்பு. அது வெறும் எரிதலின் குறியீடல்ல. மனித அனுபவங்களின் மொழியாக மாறி நினைவு, காதல், இழப்பு, மரணம், காலம், மொழி அனைத்தும் நெருப்பின் பரிணாமங்களாகக் கவிதைகளில் வெளிப்படுகின்றன.
-லார்க் பாஸ்கரன்
Be the first to rate this book.