ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், போர்க்குணம் கொண்ட சுப்ரமணிய பாரதி, தனது எழுத்து மூலம் ஆங்கிலேய அரசை நடுங்க வைத்தவர். தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பாடல்களைப் பாடினர். நவீன தமிழ் இலக்கியத்துக்கு மறுமலர்ச்சி தந்தவராக கருதப்படும் பாரதியின் எண்ணம் முழுவதும், ஒன்றுபட்ட இந்தியாவை அடைவதிலேயே இருந்தது. அவருடைய தேசபக்திப் பாடல்களை பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட ‘பாரதி‘ என்ற பட்டமே அவருக்கு பொருத்தமான பெயராக நிலைத்துவிட்டது.
Be the first to rate this book.