சுவாமி சகஜானந்தர் முப்பது வருடங்களுக்கும் (1936-1959) மேலாகத் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களது வாழ்வு மேம்படுவதற்காகவும் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடிய போராளி ஆவார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குரல் மட்டும் கொடுக்காமல், அவர்களது கல்விக்காகப் பாடசாலைகள் அமைத்து, மாணவர்கள் தங்குவதற்கும் உணவிற்கும் வசதி செய்துகொடுத்து, ஆண்கள், பெண்கள் எனப் பல்லாயிரக்கணக்கான பட்டியலின மக்களைப் பட்டதாரிகளாக்கிய பெருமை கொண்டவர்.
ஆன்மிகத்தில் சகஜானந்தரின் ஈடுபாடு, ஒடுக்கப்பட்டோருக்காக அவர் முன்னெடுத்த போராட்டங்கள், செய்த சேவைகள் என சகஜானந்தரின் தியாக வாழ்க்கையைப் பதிவுசெய்து, இன்றைய இளைய தலைமுறையினருக்கு சகஜானந்தரை இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்துகிறார் ம.வெங்கடேசன்.
Be the first to rate this book.