"சோழன்தலை கொண்ட வீரபாண்டியன்' - இதுதான் நாவலின் தலைப்பு... ஒரு வரியில் சொல்வதென்றால் இதுதான் நாவலின் கதை. இந்நூல் தமிழ் சரித்திர நாவல் உலகின் புதுவரவு. புதுமையான வரவும் கூட!
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம். பாண்டியர்களின் ஆட்சி தளர்ந்து இருக்கும் காலம். சுந்தரபாண்டியரும் வீரபாண்டியரும் அவர்களின் தாத்தா வீடான சேர நாட்டிலே அடைக்கலமாக இருக்கிறார்கள். ஏறத்தாழ தமிழகம் முழுவதும் சோழர்களின் கைவசமாக உள்ளது. பாட்டனாரின் பாதுகாப்பிலே வாழ்ந்த சுந்தரபாண்டியரும் வீரபாண்டியரும் மீண்டும் வந்து மதுரையில் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். அவர்கள் அமைக்கும் வியூகம் எத்தகையது என்பதை ஜிராவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்று காட்சிப்படுத்துகிறது. சரித்திர ஆதாரங்களை அழகழகான வர்ணனைகளோடு சுவாரசியமாக எழுதிச் செல்கிறார் ஜிரா. சரித்திர நாவலுக்கான மெனக்கெடல்தான் இவருடைய சிறப்பு. ஆச்சரியப்படுத்தும் இன்னோர் அம்சம் இவரது வரலாற்று அறிவும் வரலாற்றுப் பார்வையும்.
* தமிழ்மகன்
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன். வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க் கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண். இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு', சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', புதினமாக 'காமரூபவல்லி' பதிப்பித்த பிறகு கொண்டு வந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு 'சுவீட் காரம் காப்பி'.
Be the first to rate this book.