கூவினதில் எங்கேயோ
விழித்தல் நிகழ்ந்தது
இருள்மண்டிய புவிக் கோளத்தில்
புலப்படாத சேவலும் அவனும்தான் யாரும்
துயிலிலிருந்து மீண்டிருக்கவில்லை ஓரொலிகூட வாய் திறக்கவில்லை பிரபஞ்சம்
இருவருமற்ற அகாலத்தில் முண்டி வெளியேறும் பச்சையத்தில்
உயிர்த்தசையத் தொடங்கிற்று.
Be the first to rate this book.