“பசியால் வெறி கொண்டு கிடக்குமென்
கண்களைக் கண்டுமா நீயென்னைத்
தேன்சிட்டு தேன்சிட்டு என்று அழைத்துக் கொண்டிருக்கிறாய்?”
“நீ புலியல்ல தேன்சிட்டுதான்
எப்படியிருந்தாலும் நீ பசியாற வேண்டும்
இதோ என்னை எடுத்துக் கொள்”
என்று என் ஆடை ஆபரணங்களை
அவிழ்த்து நிர்வாணமானேன்
இப்போது இந்தக் கவிதையை
ஒரு
தேன்சிட்டின்
வயிற்றிலிருந்துதான்
எழுதுகிறேன்...
Be the first to rate this book.