வலி தவிர்க்க முடியாதது; ஆனால் துன்பப்படுவது விருப்பத்தேர்வுக்குரியது.
ஓட்டக்காரர்கள் கட்டாயமாக வாசிக்க வேண்டிய இந்நூல் அனைத்து ஓட்டக்காரர்களுக்குமான பரிசாகும்.
1982இல் தான் நடத்திக்கொண்டிருந்த ஜாஸ் பாரை விற்றுவிட்டு முழுநேர எழுத்தாளனாக மாறியபின் உடல் ஆரோக்கியத்தைப் பேண ஓடத்தொடங்கினார் முரகாமி. ஒரு வருடத்திற்குப்பின் ஏதென்ஸ் நகரத்திலிருந்து மாரத்தானிற்கு ஓடி முடித்தார். அதன்பின் பல மாரத்தான் போட்டிகளில் பங்கெடுத்து தற்போது ஓட்டம் தன் வாழ்விலும் எழுத்திலும் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.
பயணக் குறிப்புகளும் பயிற்சிப் பதிவுகளும் வாழ்க்கைத் தருணங்களும் சம அளவில் உள்ளடக்கிய இந்நூல், 2005 நியூ யார்க் மாரத்தானுக்காக மேற்கொண்ட நான்கு மாத பயிற்சியைப் பற்றி வெளிப்படையாக பேசும் இந்நினைவுக் குறிப்புகள், டோக்கியோவில் உள்ள ஜிங்கூ கயென் தோட்டத்தில் ஓர் ஒலிம்பிக் வீரருடன் ஓடிய அனுபவத்திலிருந்து சார்ல்ஸ் நதிக்கரையில் ஓடிய அனுபவங்கள் வரை பல வாழ்க்கைத் தருணங்களை விவரிக்கிறது.
நகைச்சுவையும் - நெகிழ்ச்சியும், விளையாட்டுத்தனமும் - தத்துவப் பார்வையும் என ஒன்றன் பின் ஒன்றாக கலந்து முன்வைக்கப்பட்டுள்ள இந்நினைவுக் குறிப்புகள், தலைசிறந்த அதேசமயம் பொதுவெளியில் அதிகம் தன்னை முன்வைக்காத எழுத்தாளரான முரகாமியின் ரசிகர்களும் நீண்ட தூர ஓட்டத்தில் அவரை போலவே பெரும் நிறைவை அடையும், எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே இருக்கும் ஓட்டக்காரர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.