தமிழ் கவிதை இயக்கத்திற்கு. நின்று நிலைத்துப் பெய்யும் மழையைப் போன்ற கவிதைகளை தந்திருப்பவர் மோகனரங்கன். இவரது கவிதைகள் கட்டமைக்கும் காட்சிகள், உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் பிரதிபலிப்புகள் காலவோட்டத்தோடு சற்றே முரண்பட்டவையாகவும், சொல்லப்பட்ட முறைகளால் தனித்தன்மை கொண்டவையாகவும் அமைந்துள்ளன. இவற்றின் மரபான மொழியினாலும், பாடுபொருட்களாலும், வெளிப்பாட்டு முறையினாலும் இக் கவிதைகள் பெரிதும் அகத்தன்மை நிரம்பியவையாக உள்ளன.
-கண்டராதித்தன்
மோகனரங்கனின் கவிதைகளின் அடையாளமாக இருப்பவை இசைநயம். பழந்தமிழ் கவிதைகளின் சொற்சேர்க்கைகள் மற்றும் அதன் நினைவுகள் என்று தொகுக்கலாம் இவை வளமார்ந்த இசை மொழி கொண்ட அசலான தமிழ்க் கவிதைகள். இனிப்பும் சத்தும் நிரம்பிய செவி நுகர் கனிகள்.
-இசை
நினைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் ஊசலாடுபவை மோகனரங்கனின் கவிதைகள். காலத்தின் பிரவாகத்தில் கைவிட்டு ஒழுகிச் சென்ற நொடிகளைத் தேடித் துழாவும் இந்த கவிதைகளின் மென் முறுவலுக்கு அடியில் புதைந்து கிடக்கிறது ஒரு தீராத ஏக்கம். அந்த ஏக்கத்தின் எண்ணையில் திரியிட்டுச் சுடர்கிறது கவிதை. முப்பது ஆண்டுகளாக நவீன் தமிழக் கவிதை வெளியில் செயல்பட்டு வரும் கமோகனரங்கன் கவிதைகளின் மொழி மாறியிருக்கிறது. கவித் தருணம் மாறியிருக்கிறது. உவமைகளும் படிமங்களும் மாறியிருக்கின்றன. ஆனால் அந்த ஏக்கம் மட்டும் மாறவேயில்லை. அதில் சுடர் விடும் ஒளியும் குன்றவேயில்லை.
-விக்னேஷ் ஹரிஹான்
Be the first to rate this book.