முகலாயச் சக்கரவர்த்தி முயன்று பார்த்து தோல்விபெற்றான். சண்டமாருதம் போன்ற எதிரிப்படையினால் ஏன் சித்தத்தைக் குறைக்கமுடியவில்லை. சாத்பூரா முழுவதும் ரத்தக்காடானபோது என்மனம் குலையவில்லை. உற்றார் உறவினரும், ஆருயிர் த்தோழர்களும், களத்திலே பிணமானபோதும் என் உறுதி குலையவில்லை. போர்! போர்!! போர்!!! என்றே கர்ஜித்தேன். இதோ. என்னை நாடாளத் தகுதியற்றவன் என்று கூறிவிட்டார்கள். நான் சூத்திரன். சூத்திரனுக்கு சாஸ்திரம் அனுமதி தரவில்லையாம். ராஜ்யம்ஆள!
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.