திரைத்துறை சார்ந்து வெளியானவை போலத் தமிழில் சின்னத்திரை நெடுந்தொடர் உலகம் சார்ந்த புத்தகங்கள் வெளியானதில்லை. பா. ராகவனின் இந்த அனுபவக் குறிப்புகள் அவ்வகையில் ஒரு முதல் முயற்சி. (இதன் ஓரிழையை உருவி எடுத்து உருவாக்கப்பட்டதுதான் அவரது பூனைக்கதை நாவல்.)
2004-2021 காலக்கட்டத்தில் பாரா இடைவெளியின்றி சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு வசனம் எழுதி வந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலாளிகள், அதிகாரிகள், தொழிலாளிகளுடன் பழகக் கிடைத்த வாய்ப்பின் மூலம் தாம் பெற்றவற்றை இந்நூலில் விலகி நின்று அலசிப் பார்க்கிறார்.
அவ்வகையில் இந்நூல், ஓர் எழுத்தாளரின் சுய அனுபவங்களின் வழியாகக் கலை உலகின் ஒரு பிரிவின் - ஒரு காலக்கட்டத்தின் வரலாறாக விரிகிறது.
Be the first to rate this book.