பறக்கும் போது பறவைகள்
கால்களை மறந்துவிடுகின்றன
உறங்கும் போது அவை
பாடல்களை மறந்து விடுகின்றன
ஊட்டும் போது அவை
பசியை மறந்து விடுகின்றன
கூடு கட்டும் போது
காதலை மறந்து விடுகின்றன
செரிக்கும் போது
விதைகளை மறந்து விடுகின்றன
விடுதலையை மட்டும்
ஒரு போதும் மறப்பதில்லை...
Be the first to rate this book.