1857- சிப்பாய் புரட்சிக்குக் காரணம் என்ன?
தோட்டாக்களில் கொழுப்பு தடவும்படி ஆங்கில அதிகாரிகள் உத்தரவிட்டதால்தான், புரட்சி கிளம்பியதென்று ஆங்கில சரித்திராசிரியர்கள் தங்களுடைய புத்தி, கற்பனை சக்தி முதலியவற்றை உபயோகித்து கூறியதையே இன்றுவரை நாம் பாடபுத்தகங்களில் படித்துக்கொண்டிருக்கிறோம். தோட்டாக்களில் பசு, பன்றிக் கொழுப்பு தடவப்பட்டிருக்கிற தென்ற வதந்தியைக் கேட்டவுடன் ஜனங்களுக்கு வெறிபிடித்து விட்டதாயும், அது உண்மையா, பொய்யாவென்றுகூட யாரும் விசாரிக்கவில்லையென்றும் அந்நாளில் ஒரு சரித்திர ஆசிரியர் கூறியிருக்கிறார்.
உண்மையில், தோட்டாக்ககளில் கொழுப்பு தடவப்பட் டிருக்கிறதென்ற 'வதந்தியை இந்திய ஜனங்கள் குருட்டுத் தனமாக நம்பிவிடவில்லை. சரி, அந்த அற்ப காரணத்திற்காக சில அறிவீனர்களால் அப்புரட்சி ஆரம்பமானதாகவே வைத்துக் கொள்ளுவோம். அப்படியாயின் நானா சாகிப், லக்ஷ்மி பாய், டில்லி சக்கரவர்த்தி, ரோஹில்கண்ட் கான்பகதூர் கான் முதலிய மேதாவிகளும், வீரர்களும் அதில் ஏன் கலந்து கொண்டனர்? கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களைத் தொடும்படியான அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டு விட வில்லை? அவ்விதமிருக்க அந்த முதலாவது சுதந்திர யுத்தத்தில் அவர்கள் முக்கிய பாத்திரர்களாக விளங்கியதற்குக் காரணம் என்ன?
1857 புரட்சிக்கான விதை, எதிர்ப்பு பரவி வளர்ந்து, புரட்சி நடந்தவிதம், புரட்சியின் விளைவு குறித்துப் பேசுகிறது இந்நூல்.
Be the first to rate this book.