தமிழர்களே. வாழ்ந்து செழித்த காலங்கள் வரலாற்றில் நமக்கு உண்டு: அயலார் படையெடுப்பால் வீழ்ந்து நசிந்த காலங்களும் உண்டு. அயலார் ஆட்சியில்கூட அக்காலத் தமிழர்கள் தங்கள் இன அடையாளத்தையும் தமிழ் மொழியையும் காத்து அடுத்த தலைமுறைக்குத் தந்தனர்.
ஆனால் இப்பொழுது இந்திய ஏகாதிபத்தியம் அன்றாடம் நடத்தும் அதிகாரப் பறிப்புகளும், அயல் இனத்தார் குவிப்புகளும், இந்தி -சமற்கிருதத் திணிப்புகளும் நம் இன அடையாளத்தையும் தமிழையும் அழிக்கும் ஆபத்து உள்ளது. விளிம்பில் நிற்கிறோம்; வேடிக்கை பார்க்கும் காலம் இல்லை; விழித்தெழுங்கள்!
இன உரிமை மீட்பில் ஏதாவதொரு வேலை செய்யுங்கள்! வெளிப் படையாக செயல்பட முடியாதவர்கள் கருத்துகளைப் பரப்புங்கள்! சிந்திக்கத் துணியுங்கள்! செயற்களம் வாருங்கள்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது!
Be the first to rate this book.