சு. வேணுகோபால் தமிழின் தனித்துவமான படைப்பாளி, நிதானமும் ஆழமும் மானிடப் புதிர்களும் கலைமேன்மையோடு இவரது படைப்பில் அற்புதமாகக் கூடிவந்திருக்கின்றன. சக படைப்பாளிகளின் படைப்புகளை இந்த படைப்பு மனத்தோடு அணுகி மதிப்பீடு செய்திருக்கிறார். வாசகமனத்திற்கு முக்கியத்துவம் தந்தும் விமர்சனங்கள் செய்திருக்கிறார். தான் வாசித்த முக்கியமான குறுநாவல்களோடு மதிப்பு மிக்க சில நாவல்களையும் இந்த நூலில் மதிப்பீடு செய்திருக்கிறார். சு. வேணுகோபாலின் இந்த விமர்சன கட்டுரைகளில் படைப்பு குணம் சார்ந்து பல தெளிவுகள் புரிதல்கள் நமக்குக் கிடைக்கின்றன. வாசகர்களுக்கான முக்கியமான நூல் இது. இவரது கட்டுரைகள் படைப்புகளைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவை.
Be the first to rate this book.