மனித மனத்தின் ஆழம், இருள், அச்சம், கனவு அனைத்தின்மீதும் வெளிச்சம் போட்டுக் காட்டிய புரட்சிகர உளவியலாளரின் கதை.
உளப்பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட். இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகளை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ‘மனம்’ எனும் ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தில் கொண்டு வந்தவர். அவரது வாழ்வையும் அவர் முன்வைத்த கருத்துகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்த நூல்.
இந்நூலை எழுதிய எஸ்.சரத்குமார் மாவட்ட அரசு மனநல மருத்துவர் என்பது கூடுதல் சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால் நம்மை நாமே புரிந்துகொள்ள உதவும் கையேடு இந்த நூல்.
Be the first to rate this book.