தோழர் ப. அமல் எழுதியுள்ள ‘சிகரமும் சிறியதாய்’ என்ற இந்தப் புத்தகம், இளைஞர்களை மேலேற்றிவிடும் சிந்தனைத் தொகுப்பு. உங்கள் வாழ்வின் தாழ்வான தருணங்களில், இப்புத்தகம் திடீர் அலையாய் எழுந்து உங்கள் மனப் படகை உயர்த்தும். உளவியல் ஊக்கம் ஊட்டும் சமூகநீதிப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் ஓர் உற்சாகக் கதைசொல்வியாக இந்தப் புத்தகம் திகழும்.
பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் (கரச) உதவிப் பேராசிரியர், பாரீஸ் பல்கலைக்கழகம் சமூகத்தை விழிப்படையச் செய்யக்கூடியதாக இந்த நூல் அமைந்துள்ளது. தோல்வி என்பது நாம் கற்றுக்கொள்வதற்கான பாடம் என்கிற வாழ்வியல் பாடத்தை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
Be the first to rate this book.