தேசூரி தூங்கி வழியும் ஒரு ராஜஸ்தான் கிராமம். அங்கு ஒன்றும் பெரிதாக நிகழ்வதில்லை. அது அங்கு குறும்பும், சாகசமும் நிறைந்த சிறுவர்கள் சுபாவும், செளவும் வரும் வரையில்தான். சுபா மிகவும் தந்திரசாலி. சௌவைப் பற்றிக் கூற ஒரே ஒரு குணம்தான் உண்டு – அவனது எல்லையற்ற பசி. இருவரும் இணைந்து, பல்வேறு நகைச்சுவையான சம்பவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை அவர்களே உருவாக்கியவைதான். அவை தேசூரியில் மறக்க முடியாத நிகழ்வுகளாகி விடுகின்றன.
Be the first to rate this book.