செயற்கை நுண்ணறிவின் ஆரம்பகட்டம் தொடங்கி இப்போது அடைந்திருக்கும் அசுர வளர்ச்சி வரை அத்தனை அம்சங்களையும் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
படிப்பதற்கு, எழுதுவதற்கு, வீடியோக்கள் உருவாக்க, புகைப்படங்கள் எடிட் செய்ய, ஆய்வு மேற்கொள்ள என நாம் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்த ஐம்பதுக்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள் என்னென்ன இருக்கின்றன, அவற்றைக் கொண்டு நாம் எப்படி வாழ்வை மேம்படுத்தலாம் என்கிற பட்டியலையும் தருகிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவால் ஏற்படப்போகும் வேலை இழப்புகளுக்கு அஞ்சாமல் அவற்றால் பெருகப்போகும் வாய்ப்புகளை அறிந்துகொண்டு அவற்றைக் கைவசப்படுத்தும் வழியையும் காட்டுகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.