எங்கோ அவசரமாக சென்றுக் கொண்டிருக்கும் வழியில் மேகம் கருத்து நம் மீது விழும் தூறல், எவ்வளவு பெரிய அவசரமானாலும் நம்மை கட்டுபடுத்தி வசியம் செய்து எங்கோ ஒரு இடத்தில் ஒதுங்கி நின்று அக்கணம் இவ்வுலகத்தை ரசிக்கச் செய்யும். அப்படித்தான் ஜாமியின் கவிதைகளும்.
‘மோனாலிசா’வின் ஓவியம் டிஐிட்டல் செய்வதற்கு முன்பு, அதனை எங்கிருந்துப் பார்த்தாலும் உங்களைப் பார்ப்பது போலவே தோன்றுமாம். அப்படித்தான் இத்தொகுப்பினுள் உள்ள பல கவிதைகள் உங்களுக்கு அமையும்.
கட்டாயம் ஒரு கணம் ஏதோ ஒரு கவிதை உங்களுக்கே உங்களுக்காக எழுதியது போல தோன்றும். 100 காப்பிகளில் அது உங்களுக்கான காப்பி என்று ரசித்து குடித்துவிட்டு கடந்து விடுங்கள்.
எதார்த்தமாக கடக்க முடியாத பல உணர்வுகளை, மிக எதார்த்தமான வார்த்தைகளால் கடத்தியிருப்பது வாசிப்பதற்கு எளிதாகவும் மன நிறைவாகவும் உள்ளது.
Be the first to rate this book.