முப்பத்தியிரண்டு கவிஞர்களின் கவிதைகளை சுமந்து வந்திருக்கிறது இத்தொகுப்பு. ஒவ்வொருவரும் ஐந்து கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். அதில் ஒன்று மட்டும் சிவகாசி பற்றியது. மற்ற எல்லாமே அவர்கள் சுயத்தில் இருந்து தோன்றியதை எழுதியிருக்கிறார்கள். அந்த எழுத்தில் ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரை நான் உணர்ந்தது போல நீங்களும் உணரலாம். அந்த உயிரை உணர்தலே எழுத்தின் வெற்றி. முதல் வெற்றி என்பேன். அடுத்தடுத்த நகர்வுகளில் அது உச்சம் பெறலாம். அவர்களின் முதல் வெற்றிக்கு ஒரு உயிர் கொடுக்கும் முயற்சி தான் இந்த செம்புலப் பெயல் நீர்.
Be the first to rate this book.