பெரும்பசி ஒன்றில் அமர முற்படும்போது பரிமாறும் பேராவலில் ஒரு குழந்தை தன் சிறுகை கொண்டு நம் இலையில் இடும் கூழின் துளி எத்துணை ருசிக்குமோ, அத்தனை ருசியானது நாவல் எழுதும் பேராவலில் கருக்களை உருவேற்றும்போது கிடைக்கும் குறுநாவல்.
நாவலாக நீட்ட அவசியம் இல்லாது, அதே சமயம் சிறுகதைக்குள்ளும் சுருக்கிவிடாத கதைக்கருக்களைக் குறுநாவல் வடிவில் எழுதுவது மிக அவசியம் என்றே தோன்றுகிறது. ஒரு சிறுகதை தனக்கென்று சில வரன்முறைகளுக்கு உட்பட்டது. சில கதைக் கருக்கள் அந்த வரன்முறைகளை மீறும்போது குறுநாவல் என்னும் வடிவம் மிகத் தேவையானது.
Be the first to rate this book.