சீர்மை முன்வெளியீட்டுத் திட்டம் #1 - நான்கு நூல்கள்

சீர்மை முன்வெளியீட்டுத் திட்டம் #1 - நான்கு நூல்கள்

1387 ₹1460 (5% off)
FREE shipping* (within India)
CommonFolks
Author: சையித் குதுப், முஹம்மது அல்கஸ்ஸாலி
Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான், ஷாஹுல் ஹமீது உமரீ
Publisher: சீர்மை
No. of pages: 1464
Currently Not Available
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788193941508, 9788193941515, 9788193941522, 9788193941539
Published on: 2020
Book Format: Paperback

Description

பிறகெப்போதும் சாத்தியப்படாத சலுகை விலையில் மதிப்புவாய்ந்த நான்கு நூல்கள்!

1. திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1) - சையித் குதுப் 

2. திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 2) - சையித் குதுப்

இது 'வழமையான மற்றுமொரு' திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல. 

மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை  குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி! 

1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது. 

3. இஸ்லாத்தில் சமூக நீதி - சையித் குதுப்

உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும், இக்கருப்பொருள்குறித்து இஸ்லாமிய ஆய்வறிவுப் புலத்தில் எழுந்த முதல் தனி நூல் இதுவென்பதும் சேர்ந்து இப்பிரதியை முக்கியத்துவம் மிக்கதாக்குகின்றன.

4. இறுதிநபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் - முஹம்மது அல்கஸ்ஸாலி

இந்நூல் நபியவர்களது சீறாவின் கண்ணியம் வாய்ந்த பகுதியொன்றினுள் வரையறுக்கப்பட்டதொரு வகையில் உலா வருகின்றது. நபியவர்களின் பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் உள்ளடக்கிய பகுதி அது. நபியவர்களின் முன் நின்று அவர்களின் பிரார்த்தனையைக் கவனித்தபோது பிரமிப்பில் நான் என்னையே இழந்து விட்டேன். பிரார்த்தனைகளின் கலைமேதை ஒருவருக்கு முன்னால் நிற்கின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. வரலாறு நெடுகிலும் அல்லாஹ்வினால் தெரிவுசெய்யப்பட்ட வேறெந்தவொரு நல்லடியாரிடமிருந்தும் இத்தகைய ஆழமும் விசாலமும் கொண்ட பிரார்த்தனைகளின் ஒரு தொகுப்பு நமக்குக் கிடைக்கப் பெறவில்லை. 

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp