சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நடக்கும் தீமைகளையும் அறியாமைகளையும் வெளிக்கொணர்ந்துள்ள சமூக சீர்திருத்த புதினம் சரஸ்வதிக்கு என்ன ஆச்சு?
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.