மழைநாளில் தன்னுடைய விடைபெறுதலை விரும்புகிற பெண், யாதொரு தடையுமின்றி எங்கும் பயணிப்பவள், அம்மா என்கிற ஒற்றைச் சொல்லை அதுவாகவே ஏந்திக்கொள்பவள், அன்பெனும் விதை நடுகிறவளாக, பின்பொரு நாளில் சொற்களால் அன்றி சிறியதொரு தொடுகையினால் தன்னுடைய மனப்பிறழ்வைச் சமன் செய்துகொள்ள முனைபவளாக, மனதுக்குள் இருக்கிற ஒரு நேசத்தைக் கலைத்துவிட இயலாத ஒரு பெண் மலையைப் போல தூக்கிக் கொண்டே அலைகிறாவளாக, மேலும் அன்பினால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிற பெண், அதனை சரியென்றே நம்புகிறவளாகவும் இருக்கிறாள். தவிர, மழையின் ஈரத்தில் விதை தூவ, நிலம் முளையரும்பிய காட்சியில் முழுமையான பெண்ணாக நிலம் மலர்கிறது என்கிறார் ம.கண்ணம்மாள்.
- கவிஞர் சக்திஜோதி
Be the first to rate this book.