சுரேஷ் பரதனின் எழுத்துக்கள் எப்போதும் என்னை உடன் அழைத்துச்செல்பவை. எளியநடையில் காலத்துக்கு முற்பட்ட நிகழ்வுகளைப் பழுப்பு நிறமேற்றிச் சொல்லக் கூடியவை.
சுரேஷ் பரதனின் கதைகள் முழுக்க, ஆண்களைவிடப் பெண்கள் அவ்வளவு நிறைந்திருக்கிறார்கள். ஆண்களின் வாழ்வையும் பெண்களினூடாகத்தான் சுரேஷ் சொல்லித் திரிகிறார்.
கதைகள் முழுக்கக் காலத்தை ஒரு மந்திரவாதியைப் போல நம் கண்முன் ஜமுக்காளத்தை விரித்து அமர வைக்கிறார் சுரேஷ்.
எப்போதும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வரிசையில் சுரேஷை நான் வைத்திருப்பதற்குச் சாட்சி இந்தச் சிறுகதைத் தொகுதியே.
-நந்தன் ஸ்ரீதரன்
எழுத்தாளர்
Be the first to rate this book.