காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் ‘சிறந்த நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் (2023-2024) விருதினையும் ‘கலைச்சுடர் மணி’ பட்டத்தையும் பெற்றவர். இந்த நூல் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் உடன்போக்கு என்னும் துறையினை புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்கிறது. உடன்போக்கு என்பதனை மரபு ரீதியாகத் துறையாக எண்ணிப் பார்க்காமல் ஒப்பிலக்கியத்தின் ஆய்வுக்களங்களுள் ஒன்றான ‘அடிக்கருத்தியல்’ (Thematology) ஆய்வின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளது. இவ்வடிக்கருத்தின் வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு மரபுகள் எங்ஙனம் புலப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இந்த நூல் ஆராய்ந்துள்ளது. கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியத்தை ஆராய்வதில் ஆய்வாளர் வெற்றி பெற்றுள்ளார்.
-பேராசிரியர் பா.ஆனந்தகுமார்
Be the first to rate this book.