“இந்தப் புத்தகம் வைதீக மதத்தின் evidence based மூலக்கூறுகளைக் கண்டறிந்து, நம் ஆராய்ச்சிக்காக நம் முன் சமர்ப்பிக்கிறது. இப்போது நாம் கடைபிடிக்கும் சில வைதீகக் கூறுகளை நாம் ஏன் கடைபிடிக்கிறோம்? அது பற்றி வைதீக விற்பன்னர்கள் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்? அது குறித்து, எந்தக் காலத்தில், எந்த நூலில், எந்த ஏட்டில் அவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்கிற ஒரிஜினல் இன்ஃபர்மேஷன் நமக்கு இந்தப் புத்தகத்தில் அப்பட்டமாகத் தரப்பட்டிருக்கிறது.
சமயச் சடங்குகள். வீட்டில் நடத்தும் கிரியைகள், பெண்களை நடத்தும் விதம், நம்மை அறியாமல் நாம் normalize செய்து வைத்திருக்கும் அக்கிரமங்கள். காலத்தோடு பொருந்திப் போகாத பல வேண்டாத மூடநம்பிக்கைகள், நம்மை அறியாமல் நாம் அனிச்சையாய் பயன்படுத்தும் சொல்லாடல்கள். என்று பற்பல செய்திகளை உங்கள் ஞானக் கண்ணிற்கு எடுத்துக் காட்டும் ஓர் அறிவுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்,”
– Dr.ஷாலினி
இந்நூலை சனாதனிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி நீதி கேட்பதற்காக எழுதவில்லை. அவர்களும் சனாதனம் பற்றிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதியிருக்கிறேன்.
-செ.தினகர ஞானகுருசாமி
Be the first to rate this book.