அமெரிக்காவில் ஒரு தமிழன் காலடி எடுத்துவைத்தது எப்பொழுது?
1843இல், சாமுவேல் வரியப்பா என்ற தமிழறிந்த சலவைத் தொழிலாளி, பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து கலிஃபோர்னியா வந்ததற்கான ஆதாரங்களுள்ளன. அன்று துவங்கிய தமிழாதிக்கம், இன்று சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத்தில் மட்டுமல்ல, அமெரிக்க அரசியலிலும் பரவலாக விரிவடைந்துள்ளது.
'மதுரையின் மகன்' சுந்தர் பிச்சை. 'துலசேந்திரபுரத்தின் மகள்' கமலா ஹாரிஸ் முதலியோரை அறியாதவர் இன்று இருப்பது அரிது. ஆனால் இப்புத்தகம் அவர்களைப் போன்ற பிரபலமானவர்களைப் பற்றியது மட்டுமல்ல. நாளடைவில், சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்புடன் சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியின் கலாச்சாரமும் மாறியுள்ளது.
கணினி அறிவியலிலிருந்து இலக்கியத் துறைக்கு மாறிய நான் கற்றும், பெற்றுமுள்ள அனுபவங்களின் தொகுப்பே இந்த நூல்.
Be the first to rate this book.