உழைக்காமல் உண்ணுவோர் தீயபாழ் உள்ளம்- இந்த உலகத்தில் தோன்றிற்று மதமான பள்ளம் பிழையே பிழைப்பாக்க சாதிகள் தந்தார் - மக்கள் பேதத்தின் வாழ்வைச் சுரண்டி உவந்தார்
மனிதனே சமூகத்தின் உயிருக்கு நாடி - சமய மதங்கள் வளர்ந்தன கடவுள்கள் கோடி மனிதனே உலகத்தின் தலைவன்-அவனே அனைத்துக்கும் மாண்புள்ள புலவன்
உழைப்பே மனிதனின் உன்னத ஆற்றல்- கடும் உழைப்பினால் வந்ததே உயர்வு முன்னேற்றம் உழைத்துப் படைத்தது மானிடம் அன்றோ- அட அதனிலும் உயர்ந்தது உண்டெனல் நன்றோ?
- உலோகாயதச் சித்தர்
Be the first to rate this book.