மாறிவரும் உலகப் பொருளாதாரமும், நடுத்தர வர்க்கத்தின் அன்றாடப் போராட்டமும் தலைமுறைகள் கடந்து தொடர்கின்றன. வாழ்க்கையின் இந்தச் சுழலில் சிக்கித் தவிக்கும் எளிய மனிதர்களுக்கு, ஒரு பொருளாதார வழிகாட்டியாக உதவி செய்கிறது சோம.வள்ளியப்பனின், ‘சம்பளம் பத்தலையா?’ எனும் இந்நூல்.
தொழில்நுட்பத்தின் வரவால் பழைய வர்த்தக ஆட்டங்கள் கலைக்கப்பட்டு, புதிய ஆட்டக்காரர்கள் களம் கண்டுள்ளனர். உலக மாற்றத்தைப் புரிந்து கொண்டவர்கள் புதிய வழிகளில் வருமானம் ஈட்ட, ஏனையோர் தவிக்கின்றனர். இந்த விழிப்புணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.