எது சரி எது தவறு? எதைக் கொடுப்பது எதைக் கேட்பது அதிலும் எதை தட்டிக்கேட்பது? எதில் நெகிழ்கிறோம்? எதில் கோபம் கொள்கிறோம்? எதில் சாந்தம் அடைகிறோம்? எதில் நிம்மதி. அமைதியாகிறோம்? என கேட்கப் படும் எல்லா கேள்விகளுக்குப் பின்னாலும் நம்பிக்கைகளாகவும் சில உணர்ச்சிகளாகவும் விழுமியங்களே இருக்கின்றன. அவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சக்திகொண்ட ஒரு கலையே இலக்கியம். ஒவ்வொரு இலக்கியத்திலும் ஓர் சமூகம் இருப்பதும், ஒவ்வொரு சமூகத்திலும் எல்லா இலக்கியமும் இருப்பதுமே வாழ்வியல், அப்படிப்பட்ட வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு எந்த சமரசமுமின்றி சமூகம் சார்ந்து எழுதப்பட்டதே 'சமர்' நூல்.
-ஜின்னா அஸ்மி, படைப்புக் குழுமம்
Be the first to rate this book.