சிறுகதை என்பது மனித வாழ்வின் ஒரு முக்கிய சிறு நிகழ்வு, உணர்ச்சி அல்லது சிக்கலை மையமாகக் கொண்டு, சுருக்கமான உரைநடை வடிவத்தில், ஒரு மணிநேரத்திற்குள் படித்து முடிக்கும் வகையில் எழுதப்படும் இலக்கியமாகும். இது சுருக்கமாகவும் விறுவிறுப்பான நடை உடையதுமாக அமைந்து, சொல்ல வந்த கருத்தை வாசகர் மனதில் சட்டென்று பதிய வைத்துச் செல்லும் இயல்புடையவை.
இத்தகைய சிறுகதைகளில் சில ஓரிரு பக்கங்களில் முடிந்துவிடக் கூடிதாக அமைந்திருக்கும். இவை போகிற போக்கில் ஒரு சில நிமிடங்களில் நம் மனதில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிவிடும். இத்தகைய சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இந்த சிறுகதைகளுக்கு இடையில் சில கவிதைகள் பாடல்களைப் போன்று அமைந்து சுவை சேர்த்துள்ளன.
Be the first to rate this book.