சமகாலக் கவிதை - கவிதையியல் குறித்த கவிஞர்களின் கருத்துத் தொகுப்பு இந்த நூல்.கவிதைகள் - கவிதையியல் குறித்து, கோட்பாட்டாளர்களும் விமர்சகர் களும் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து நகர்ந்து, கவிஞர் களைப் பேச வைத்ததுதான் இந்த உரையாடல்களின் முக்கியத்துவம். கவிஞர் மௌனன் யாத்ரிகா கவிஞர் களிடம் கேள்விகளை அனுப்பி அவர்களுடைய பதில்களைப் பெற்று அவற்றை இப்போது நூலாகத் தொகுத்துள்ளார்.
தங்களுடைய படைப்பு, வாசிப்புச் செயல்பாடு, கவிதை உலகு ஆகியவை குறித்து கவிஞர்கள்சொன்னவை முகநூலில் வெளியானபோது பரவலான கவனத்தைப் பெற்றன. விவாதங்களும் நடந்தன. தமிழ்க் கவிதை குறித்து நடந்த மிக விரிவான உரையாடலாக அமைந்துள்ள இந்த நூல்,சமகாலக் கவிதை, கவிஞர்கள், கவிதையியல் ஆகியவை குறித்த ஆவணமாக விளங்கக் கூடியது.
Be the first to rate this book.