ஒன்றாவதுவகுப்பையே முடிக்காத DJ டேனியல் சென்னை பழவந்தாங்கலில் பழைய இரும்புக்கடை (காயலான்கடை) வைத்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் என்றாலும் பிறந்தது. வளர்ந்தது எல்லாம் சென்னையில்,
பள்ளிக்கூடவாசம் அற்றுப்போன டேனியல், வாழ்க்கை முழுவதும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போலக் கிடைத்த வேலையை எல்லாம் செய்கிறார். இடைச்செருகலாய் ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம், டேனியலை எழுதத் தூண்டுகிறது. எழுத்தாளராகத் தனது முதல் நாவல், 'மூதின் முல்லை'யைத் தமிழ் வாசகர்களுக்குத்தந்தார். அதற்கு வாசகர்கள் தந்த உற்சாகத்தில், இதோஅவரது இரண்டாவது நாவலான 'ருத்ர கணிகை'. முதல் நாவலைப் போலவே, இந்த நாவலையும் பெண்களைமையக் கதாபாத்திரங்களாகக் கொண்டு படைத்திருக்கிறார்.
பக்திச்சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட கணிகையினரை, இந்தச் சமூகம் எந்த நிலைக்குத் தாழ்த்தியதுஎன்பது நாம் அனைவரும் அறிந்தஇருண்ட வரலாறு.
இந்நாவலில்வரும் கனிவே உருவான கணிகையர்களின் ஊரறியாத இன்னொரு பக்கத்தை விவரித்துள்ளார் டேனியல் DJ.
-முருகன்மந்திரம் (பாடலாசிரியர், வசனகர்த்தா)
Be the first to rate this book.