ரோமாபுரியோடு தமிழ்நாடு வாணிகத் தொடர்புடையது மட்டுமன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது, ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள், இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்படியாக இருக்கின்றது, கரிகால் வளவனே திரும்ப நம் கருணாநிதியாராகப் பிறந்தாரோ என்றுகூட நாம் நம்பும்படியாக இருக்கின்றது, அந்தக் கரிகால் வளவனும் இந்தக் காவிரி நாட்டிலேயேதான் பிறந்தான். இவரும் அந்த நாட்டிலேதான், காவிரிக்கு அவன் கரை கட்டினான். இவரும் காவிரி நீருக்கு ஒரு வரம்பு கட்டுவதற்கு இயன்றவரை முயல்கின்றார்.
Be the first to rate this book.