தமிழன் காசிக்கு ஒரு கதாப்பாத்திரத்தின் குணநலன்களை அழகாக விவரிக்கும் திறன் கைவரப்பெற்றுள்ளது. அது ஒவ்வொரு கதையிலும் இடம்பெறும் பாத்திரங்களை நம் நெஞ்சில் பசை போட்டு ஒட்டிவைத்து விடுகிறது.
இவை கதைகள் அல்ல. அவரது அனுப வங்கள். அவற்றில் கற்பனைகள் கலந் திருக்கலாம். என்றாலும் இந்தக் கதை களைப் படிக்கும்போது, அவை முழுக்க முழுக்க கற்பனைச் சரடுகள் அல்ல என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
கதைகளில் இடம்பெறும் சூழல்களை நுணுக்கமாகக் காட்சிப் படுத்துவதிலும் இவரது வல்லமை வெளிப்படுகிறது. இத் தகைய காட்சி விவரிப்புகள் ஒவ்வொரு கதையையும் சின்னச் சின்ன குறும்படங் களைப் பார்க்கும் திருப்தியை ஏற்படுத்தி விடுகின்றன. தமிழன் காசி சினிமா வுக்குப் போயிருந்தால் வெற்றிகரமான இயக்குநராகியிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
-பெ.கருணாகரன்
ஆசிரியர் - கல்கோனா மின்னிதழ்
தமிழன் காசி தொழில் அடிப்படையில் ஒரு ஆடை வடிவமைப்பாளர்.தமிழ் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராக் காதலுக்குச் சொந்தக்காரர்.பகுத்தறிவுச் சிந்தனையாளர்.திராவிட இயக்கப் பற்றாளர், தீவிர வாசிப்பாளர், ஓவியர். பாடகர் என பன்முகத் திறனராக வலம் வரும் இவர், எழுத்தாளராகவும் தனி முத்திரை பதிக்கத் தவறாதவர்.
இந்த நூல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு, அவரது கதைகள் ஒவ்வொன்றும் நுண்ணிய அரசியலைப் பேசுகின்றன. இவற்றைக் கதைகள் என்று சொல்வதைவிட நம்மில் சிலரது வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்கள் என்று சொல்லலாம்.
Be the first to rate this book.