ரெட்டமலை சீனிவாசன் எழுத்துகள் ஆவணங்கள் மற்றும் அவர் தொடர்வான ஆவணங்களைத் தாங்கி வரும் முதல் பெரும் தொகுப்பு இதுவரை வெளிவராத பல ஆவணங்கள் மற்றும் அவரின் உரைகள் அடங்கியது. 1890 முதல் 1945 வரையிலான தலித் மக்கள் பெற்ற உரிமைகளுக்கான ஆணித்தரமான ஆவணங்களை இத்தொகுப்பில் காணலாம். தலித் மக்கள் மற்றும் அக்கால தலித் தலைவர்கள் எவ்வாறு சாதி இந்துக்களின் எதிர்ப்புகளை முறியடித்து பொறுமை மிக்க ராஜதந்திரங்களோடு அதிகாரப் பகிர்வினை எப்படி அடைந்தார்கள் என்பதற்கு ரெட்டமலையாரின் பணிகள் வாயிலாக அறிய முடிவதுடன், அக்காலக்கட்டத்தின் வரலாறு, கருத்தியல் வளர்ச்சி மற்றும் அரசியல் பரிணாமங்களின் பாய்ச்சல்களைப் புரிந்துக் கொள்ள முடியும். மேலும் இத்தனை ஆண்டு காலம் தலித் மக்களின் அரசியல் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட புறக்கணிப்புகளையும் இருட்டடிப்புகளையும் எந்தவித சமரசமும் இன்றி தகர்த்தெறிகிறது இப்பெருந் தொகுப்பு: ரெட்டமலையார் எவ்வாறு தனிப்பெரும் தலைவராக பிற சமூக தலைவர்களை அரவணைத்து அவர்களுக்கு வழி காட்டக்கூடிய தலைமைப் பொறுப்பை எவ்வாறு அடைந்தார் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக அறிய முடியும்.
Be the first to rate this book.