இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கேற்ப குறள் வெண்பாவைக் குறுங்கவிதையாய் நவீனமாக்குகிறது இத்தொகுதி. எக்காலத்துக்குமான இலக்கியத்துக்கு இக்காலத்தின் அரிதாரம் பூசி ரசிக்கும் எத்தனம். வள்ளுவருக்கு ஜீன்ஸ், டிஷர்ட் உடுத்துகிற முயற்சி. காமத்துப்பாலில் ஒரு கேப்பசீனோ!
Be the first to rate this book.