இந்தியாபோன்ற ஜனநாயக நாடுகளில் ‘மக்களின் நலத்தையும் மேம்பாட்டையும் அடிப்படையாக வைத்துதான் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்’ என்பது பெருந்தலைவர் காமராசரின் கருத்தியல். அதன் அடிப்படையில் முதலமைச்சர்ரங்கசாமி ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில் நீர்ப்பாசனம், வேளாண்மை, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கும் எப்படி வழிவகுத்தார் என்பதையும் விவாதித்து இருக்கிறார் நூலாசிரியர் ச.ஜெனார்த்தனன். புதுச்சேரிவரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், மாநிலத்தில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார, அரசியல் வளர்ச்சி பற்றிய புரிதலை ஏற்படுத்த இந்தப் புத்தகம் உதவிசெய்யும் என்று நம்புகிறேன்.
- தமிழிசை சௌந்தரராஜன், துணை நிலைஆளுநர், புதுவை.
மக்களோடுமக்களாய், மக்களின் தலைமகனாய் வாழும் என்.ரங்கசாமிக்கு மட்டுமேஅந்தத் தகுதி உண்டு. இந்தப் புத்தகத்தின் வாயிலாக ‘ரங்கசாமி ஏன் புதுச்சேரியின் தந்தையாகிறார்?’ என்ற வினாவுக்கு பல தலைப்புகளில் காரணங்களைக்கூறி மெய்ப்பிக்கிறார் நூலாசிரியர்.
- க.லட்சுமிநாராயணன் அமைச்சர், பொதுப்பணி, புதுவை.
Be the first to rate this book.