ராமாயணம் இன்றுவரை முக்கியமான இதிகாசமாகப் போற்றப்படுவற்கான காரணங்களில் ஒன்று. அதன் ஒவ்வொருபாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு காவியம் உயர்ந்து மிளிரக் காரணம், அதில் வரும் சிறப்பான பாத்திர உருவாக்கங்களே. உலக இலக்கியங்கள் அனைத்திலும் நாம் இந்தத் தன்மையைக் காணலாம். ராமாயணத்தில் பெண் பாத்திரங்களைத் தனியே நோக்கும்போது, ஒட்டுமொத்த ராமாயணமும் பெண்களாலேயே நடத்தப்படுவதை நாம் உணரலாம். ஈடு இணையற்ற நாயகன் ராமனின் வாழ்க்கை முழுவதும் அவனை வழிநடத்தும், அவனோடு முரண்படும், அவனால் முக்தி பெறும் அனைத்துப் பெண் கதாபாத்திரங்களையும் இந்த நூலில் அழகுறச் சொல்லி இருக்கிறார் ஜெயந்தி நாகராஜன். பெண் பாத்திரங்கள் வழியே ராமாயணத்தைப் பார்க்கும்போது இந்தக் காவியம் புதுப் பொலிவு பெற்று வேறொரு கோணத்தில் துலங்குவது இந்த நூலின் சிறப்பு.
Be the first to rate this book.