1. ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்
'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தப்புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்களை நளினி கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில், சிறையில் பிரியங்காவை சந்தித்தது தனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வு என்றும், இந்த சந்திப்பு முடிந்து பிரியங்கா டெல்லி சென்ற தகவல் கிடைக்கும் வரை நளினி உணவு உண்ணாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்றும் அதில் நளினி தெரிவித்துள்ளார்.
2. ராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்
இரா. பொ. இரவிச்சந்திரன்... இராஜீவ்காந்தி கொலைவழக்கில் கால்நூற்றாண்டுக்கும் மேல் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறைப்பட்டிருப்பவர்களில் ஒருவர். இவர் தமிழகத்தைச் சார்ந்த, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதைவிட, ஈகம்செய்யத் துணிவுகொண்டு, இளம் வயதிலேயே ஈழம்சென்று, போர்செய்யும் உத்திகள்பயின்று, பகைஎதிர்த்துக் களம்நின்று, வீரம்சிந்திய விடுதலைப்புலி என்பதே மிகவும் பொருத்தமாகும். தோழர் ஏகலைவன் அவர்களின் அரிய முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் அதனை விரிவாக விவரிக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கின் மர்ம பக்கங்களை தனது 'ராஜீவ் கொலை வழக்கு: மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற நூலின் மூலமாக வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர் ஏகலைவன். அந்நூல் பெரும் வெற்றி பெற்றதோடு, இவ்வழக்கின் புலனாய்வையும், அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளையும் கேள்விக்குள்ளாக்கியது. இதைப் போலவே பரபரப்பைக் கிளப்பும் மற்றொரு நூல்தான் இது.
3. ராஜீவ் காந்தி படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்
தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் தான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் போட்டுக் கூறுகிறார் திருச்சி வேலுசாமி. இடையில் மிரட்டல்கள், உருட்டல்கள், ஆசை வார்த்தைகளைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அஞ்சாமல் தனது பணிகளைத் தொடர்கிறார். சந்திராசாமி, சுப்ரமணியசாமி ஆகியோர் மீது பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியும்கூட புலன் விசாரணைக் குழுவினர் அவற்றைச் சட்டை செய்யாமல் புலிகளை மையமாகக் கொண்டே செயல்பட்டனர். உலகம் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட விதத்தை நூல் நெடுகிலும் திருச்சி வேலுசாமி விவரிக்கிறார். யாருக்கும் அஞ்சாமல் யாருக்கும் விலை போகாமல் அவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. வேலுசாமி விடுத்த அடுக்கக்கான கேள்விகளுக்கு விடை இன்னமும் கிடைத்தபாடில்லை. சி.பி.ஐ. புலன்விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக செயல்பட்ட ராகோத்தமன் எழுதிய நூலில் புலன்விசாரணை உண்மையாகவும் முழுமையாகவும் நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டுள்ளாரே? அதற்கு முன்னாள் அதே புலன்விசாரணைக் குழுவில் ஆய்வாளராக பணியாற்றிய மோகன்ராஜ் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என பகிரங்கமாகக் குற்றம் சாட்டிவிட்டு தனது பதவியலில் இருந்து விலகினாரே? ஏன்? அடுக்கடுக்கான இந்த வினாகளுக்கு இதுவரை விடை இல்லை. மாணவர் காங்கிரசின் துடிப்புமிக்க இளைஞராகவும் பின்னர் ஜனதாக்கட்சியின் அகில இந்திய செயலாளராகவும் இயங்கிய வேலுசாமி சந்திராசாமிக்கும், சுப்ரமணியசாமிக்கும் ராஜீவ் படுகொலையில் நிச்சயமாக பங்கு உண்டு என்பதை பல்லாண்டு காலமாக ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டும் இந்த நூல் திறவாத விழிகளையும் திறக்க வைக்கும் சிந்திக்காதவர்களையும் சிந்திக்கவைக்கும் என நம்புகிறேன்.
- பழ. நெடுமாறன்
Be the first to rate this book.