புயலிலே ஒரு தோணி' மரபான சீரான கதையோட்டம் கொண்ட நாவல் அல்ல. 1930-1945 காலகட்டத்தில் உலகப்போர் பின்னணியில் கதை நிகழ்கிறது. சின்னமங்கலம் என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வளர்ந்து மெடானுக்குச் சென்று பணியாற்றும் பாண்டியன் இதன் கதைநாயகன்.
பர்மா, பினாங்கு, சிங்கப்பூர், மலேசியா, பாங்காக் போன்ற ஊர்களின் பின்னணியில் நிகழ்வுகள் நிகழ்கின்றன. ஜப்பான் படை மலேசிய மெடான் நகரில் இறங்குவதிலிருந்து கதை தொடங்குகிறது. அப்படையெடுப்பின் பின்னணியில் மாலாயாவில் வாழும் தமிழர்களின் வட்டித்தொழில், அவர்கள் வெவ்வேறு விடுதிகளில் அமர்ந்து குடித்தும் பரத்தையருடன் ஆடியும் வாழும் சூழல், அவர்களின் விவாதங்கள் வழியாக நாவல் விரிகிறது.
Be the first to rate this book.