வல்லிக்கண்ணன் போன்ற அறிஞர்கள் புதிதாக ஒன்றும் எழுதக்கூட வேண்டாம். தாங்கள் எழுத வந்த நாள் தொட்டு, தமிழ்க் கலை இலக்கிய உலகம் சம்பந்தப்பட்ட தமது அனுபவங்களை எழுதினால் புதிய தமிழ் இலக்கியத்தின் சரித்திரத்தை அல்லது அதன் தலையெழுத்தைத் தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத்தக்கதும் வழிபடத் தகுந்ததுமாகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும், அந்த மாற்றங்களினால் அவற்றை அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கப்பூர்வமாய் ரசித்துக் கிரகித்து வெளியிடும் திறனாலும் தவிர - தன் அளவில் எத்தகைய பாதிப்புக்கும் ஆளாகாத ஓர் ஆத்மயோகி அவர்.
- ஜெயகாந்தன்
Be the first to rate this book.