அறிஞர் மா. இராசமாணிக்கனார் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக "புதியதமிழகம்" என்ற இந்த நூல் வெளிவருகிறது.தமிழ்நாட்டின் பண்டைய துறைமுகமான கொற்கை குறித்து மேலும் ஒரு கட்டுரை ஆராய்கிறது என்றால், கோவூர் கிழார் என்ற பெரும் புலவரின் அறச்சீற்றத்திற்கு சோழப் பெருவேந்தன் நலங்கிள்ளி பணிந்து நின்றான் என்ற பண்புடமையை இன்னொரு கட்டுரை விரிக்கிறது.
சங்க காலம் தொட்டு நவீன காலம் வரை நாடகத் தமிழ் அடைந்த வளர்ச்சிகளையும் அதற்காக பாடாற்றியோரின் பணிகளையும் இன்னொரு கட்டுரை விளக்குகிறது.மொழிவழி மாநில உருவாக்கத்தின் போது இந்திய ஆட்சியாளர்களின் தீய நோக்கத்தால் இழந்த பகுதிகள் பல என்பதை இன்னொரு கட்டுரை விளக்குகிறது.
Be the first to rate this book.