முக்கியமான 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றுகிறோம் என்ற பெயரில் பல உரிமைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் நீக்கிவிட்டு பல மோசமான பிரிவுகளைச் சேர்த்துள்ளது பாஜக அரசு. தொழிற்சங்க செயல்பாட்டை முடக்குவதற்கான ஏற்பாடுகளும் அடங்கியுள்ளன. வாரத்திற்கு 70 மணி நேரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென பல முதலாளிகள் பேசுகிற அளவிற்கு துணிவு பெற்று விட்டனர். கோவை வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் மு.ஆனந்தன் தொழிலாளர் வர்க்க உணர்வோடு இந்தச் சட்டத் தொகுப்புகளின் மோசமான அம்சங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அவை குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இந்த நூல் மிகவும் பயனுள்ள ஆயுதமாக இருக்கும்.
Be the first to rate this book.